இந்தியா மௌரியர்க்குப் பின்னர்
1. தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சுதந்திர அரசர்களானவர்கள் யார்?
Answer: சாதவாகனர்கள்
அயோத்தி கல்வெட்டு யாருடையது ?
Answer: தனதேவன்
3. மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?
Answer: பிரிகத்ரதா
4. பிரிகத்ரதா யாரால் கொல்லப்பட்டார் ?
Answer: அவரது படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கர்
5. சுங்க வம்சத்தை மகதத்தில் தோற்றுவித்தவர் யார்?
Answer: புஷ்யமித்திர சுங்கர்
6. புஷ்யமித்திரர் எதைத் தனது தலைநகராக்கினார்?
Answer: பாடலிபுத்திரம்
7. புஷ்யமித்திரர் எந்த மதத்தைத்
தீவிரமாகப் பின்பற்றியவர்?
Answer: வேத மதம்
8. புஷ்யமித்திரர் தனது பேரரசின் அந்தஸ்தை நிலைநாட்டுவதற்காக எத்தனை முறை அஸ்வமேத யாகம் நடத்தினார்?
Answer: இரண்டு முறை
9. ஸ்தூபிகளின் சுற்று சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப்
பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை யாருடைய காலத்தில் நடைமுறைக்கு வந்தது?
Answer: சுங்கர்
10. புஷ்யமித்திர சுங்கருக்கு பின்னர் யார் அரச பதவி ஏற்றார்?
Answer: அக்னி மித்ரா
11. மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் கதாநாயகன் யார்?
Answer: அக்னிமித்ரா
12. மாளவிகாக்னிமித்ரம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer: காளிதாசர்
13. அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரா கிரேக்கர்களைச்
சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாகக்
குறிப்பிடும் நூல் எது?
Answer: மாளவிகாக்னிமித்ரம்
14. சுங்க வம்சத்தினர் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தனர் ?
Answer: நூறு ஆண்டுகள்
15. சுங்க வம்சத்தின் கடைசி அரசர் யார்?
Answer: தேவபூதி
16. தேவபூதி யாரால் கொல்லப்பட்டார்?
Answer: தனது அமைச்சரான வாசுதேவ கன்வர்
17. கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
Answer: வாசுதேவ கன்வர்
18. சுங்கர்களின் காலத்தில் அரசவை மொழியாக இருந்தது எது?
Answer: சமஸ்கிருதம்
19. சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியை ஆதரித்தவர் யார்?
Answer: புஷ்யமித்திரர்
20. யாருடைய ஆட்சிக்காலத்தில் பார்குத், சாஞ்சி ஆகிய பௌத்த நினைவுச் சின்னங்கள் சீர்செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன?
Answer: புஷ்யமித்திரர்
21. கலிங்க அரசர் காரவேலர் யாருடைய சமகாலத்தவர்?
Answer: சுங்க அரசர்களின் சமகாலத்தவர்
22. காரவேலர் பற்றிய செய்திகளை எந்தக்
கல்வெட்டிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் ?
Answer: ஹத்திக்கும்பா கல்வெட்டு
23. சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச்
சுற்றியுள்ள சுற்றுச்சுவரும் யாருடைய காலத்தது?
Answer: சுங்கர்கள்
24. கன்வ வம்சம் எத்தனைஅரசுர்களை மட்டுமே பெற்றிருந்தது?
Answer: நான்கு அரசர்கள்
25. கன்வ வம்சம் எத்தனை ஆண்டுகள் மட்டும் நீடித்தது?
Answer: 45 ஆண்டுகள்
26. நான்கு கன்வ அரசர்கள் யார் ?
Answer: வாசுதேவர், பூமிமித்திரர், நாராயணர், சுசர்மன்
27. கடைசி சுங்க அரசன் சுசர்மன் யாரால் கொல்லப்பட்டார்?
Answer: ஆந்திராவைச் சேர்ந்த வலிமிகுந்த குறுநில மன்னரான சிமுகா
28. சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டியவர் யார்?
Answer: சிமுகா
29. குஷானர்கள் வட இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
Answer: 300 ஆண்டுகள்
30. தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
Answer: 450 ஆண்டுகள்
31. சாதவாகன வம்சத்தை நிறுவிய சிமுகா எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகிறது?
Answer: 23 ஆண்டுகள்
32. சிமுகாவைத் தொடர்ந்து யார் பதவி ஏற்றார்?
Answer: அவருடைய சகோதரர் கிருஷ்ணா
33. இரண்டு அஸ்வமேத யாகங்களை நடத்திய சாதவாகன அரசர்கள் யார்?
Answer: சதகர்னி
34. சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் யார்?
Answer: கௌதமிபுத்திர சதகர்ணி
35. நாசிக் மெய்க்கீர்த்தி யாரால் வெளியிடப்பட்டது?
Answer: கவுதமி பாலஸ்ரீ
36. கவுதமி பாலஸ்ரீ யாருடைய தாய்?
Answer: கௌதமிபுத்திர சதகர்ணி
37. எந்த மெய்க்கீர்த்தியில் கௌதமிபுத்திர சதகர்ணி யவனர், சாகர், பகலவர் ஆகியோரை ஒழித்தாரெனக் கூறப்பட்டுள்ளது ?
Answer: நாசிக் மெய்க்கீர்த்தி
38. எந்தக்
கல்வெட்டு தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கிய பங்கைப்
பற்றிக் கூறுகிறது?
Answer: போகர் கல்வெட்டு
39. எந்தச்
சாதவாகன அரசர் ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்?
Answer: ஹாலா
40. அரசர் ஹாலா இயற்றிய நூல் எது ?
Answer: சட்டசாய் (சப்தசதி)
41. சட்டசாய் (சப்தசதி) என்ன மொழியில், எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது ?
Answer: பிராகிருத மொழி,700 பாடல்கள் <strong>;/
42. உலகப் புகழ் பெற்ற புத்தரின் ஆளுயர சிற்பங்கள் எந்த மலையின் பள்ளத்தாக்குகளில் செதுக்கப்பட்டுள்ளது?
Answer: பாமியான் பள்ளத்தாக்கு
43. பாமியான் பள்ளத்தாக்கு தற்போது எங்கு உள்ளது?
Answer: ஆப்கானிஸ்தானின் மையம்
44. அமராவதியில் பௌத்த ஸ்தூபிகளை கட்டியவர்கள் யார்?
Answer: சாதவாகனர்கள்
45. எங்குக்
கண்டெடுக்கப்பட்ட புத்தரின் நின்றகோலத்திலான வெண்கல சிலையானது அமராவதி பாணியை ஒத்துள்ளது?
Answer: வியட்நாமில் உள்ள ஒக்-யோ என்னும் தொல்லியல் ஆய்விடம்
46. எந்தக்
காலத்தைச் சேர்ந்த சாதவாகன அரசர்கள் இரண்டு பாய் மரங்கள் கொண்ட கப்பல்களின் சின்னம் பொறிக்கப்பட்ட, ஈய அல்லது செப்பு நாணயங்களை வெளியிட்டனர் ?
Answer: பிற்காலத்தைச் சேர்ந்த சாதவாகன அரசர்கள்
47. எங்குச்
சாதவாகன காலத்தின் கல்லால் ஆன முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது?
Answer: தாய்லாந்து, நாக்கோன் பதோம்
48. பௌத்த, சமண, வேத மதக் கடவுளர்களின் முழு உருவ சிலைகளையும், பிம்பங்களையும் வடித்தது எது ?
Answer: மதுரா சிற்பக் கலை பள்ளி
49. அலெக்ஸாண்டர் ஆளுநர்களின் பொறுப்பிலிருந்து எந்த இருசத்ராபிகள் கிளர்ச்சி செய்து தங்களை சுதந்திர அரசுகள் ஆக்கிக்கொண்டனர்?
Answer: பாக்டீரியா மற்றும் பார்த்தியா
50. பாக்டீரியா சத்ரபி யாரின் தலைமையில் சுதந்திர அரசாகியது?
Answer: முதலாம் டயோடாடஸ்
51. பார்த்தியா யார் தலைமையில் சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டது?
Answer: அர்சாகஸ்
52. கிரேக்க பேக்டீரியா அரசர் யுதி டெமஸ் என்பாரின் மகன் யார் ?
Answer: முதலாம் டெமிட்ரியஸ்
53. முதலாம் டெமிட்ரியஸ் கிமு 294 முதல் 288 வரை எதனுடைய மன்னராக இருந்தார் ?
Answer: மாசிடோனியா
54. இருமொழி வாசகங்களைக் கொண்ட சதுர வடிவிலான நாணயங்களை வெளியிட்டவர் யார்?
Answer: முதலாம் டெமிட்ரியஸ்
55. முதலாம் டெமிட்ரியஸ் வெளியிட்ட நாணயத்தின் தலைப்பகுதியில் என்ன மொழியும் பூப்பகுதியில் என்ன மொழியும் இடம்பெற்றிருந்தன?
Answer: தலைப்பகுதியில் கிரேக்க மொழி, பூப்பகுதியில் கரோஷ்தி மொழி
56. பாக்டீரியா அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞரான நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இடம் பெற்ற நூல் எது?
Answer: மிலிந்த பன்கா
57. மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையை யாரிடமிருந்து கற்றனர் ?
Answer: கிரேக்கர்கள்
58. இந்தியாவில் இந்தோ- கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் யார் ?
Answer: சாகர்கள்
59. சாகர்களின் ஆட்சியானது காந்தாரப் பகுதியில் யாரால் நிறுவப்பட்டது?
Answer: மாவோஸ் அல்லது மோகா
60. சாகர்களின் தலைநகர் எது?
Answer: சிர்காப்
61. மோரா அரசருடைய நாணயங்களில் யாருடைய உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன?
Answer: புத்தர், சிவன்
62. இந்தோ பார்த்தியர்கள் யாரால் தோற்கடிக்கப்பட்டனர்?
Answer: கிபி முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஷாணர்களால்
63. இந்தோ-பார்த்திய அரசு அல்லது கோன்டோபரித் வம்சம் யாரால் நிறுவப்பட்டது?
Answer: கோண்டா பெர்னஸால்
64. சாகர் வம்சத்தின் மிக முக்கியமான புகழ் வாய்ந்த அரசர் யார் ?
Answer: ருத்ரதாமன்
65. ருத்ரதாமனுடைய கல்வெட்டு எது ?
Answer: ஜுனாகத்/கிரனார் கல்வெட்டு
66. ஜுனாகத்/கிரனார் கல்வெட்டு எந்த மொழியில் எழுதப்பட்டது ?
Answer: தூய சமஸ்கிருதம்
67. தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பு யாருடையது?
Answer: ருத்ரதாமன் ஜுனாகத்/கிரனார் கல்வெட்டு
68. சாகர்கள் என்ன பெயர்களில் பிராந்திய ஆளுநர்களை நியமித்து அவர்கள் தங்கள் பகுதிகளை நிர்வகித்தனர்?
Answer: ஷபத்திராபஸ் அல்லது சத்ரப்ஸ்
69. குஷானர்கள் எந்தப்
பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினர் ஆவர் ?
Answer: பழங்காலத்தில் சீனாவின் வடமேற்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த யூச்-சி பழங்குடி இனம்
70. குஷானர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினர்?
Answer: பௌத்தமதம்
71. குஷானர்கள் காலத்தில் மிகச் சிறந்த கல்வி மையங்களாகச் செயல்பட்டவை எவை?
Answer: தட்சசீலம், மதுரா
72. குஷான பேரரசர்களின் மாபெரும் பேரரசர் யார் ?
Answer: கனிஷ்கர்
73. கனிஷ்கர் எந்த ஆண்டு அரச பதவி ஏற்றார்?
Answer: கிபி 78
74. கிபி 78 கனிஷ்கர் நிறுவிய சகாப்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சாகச் சகாப்தம்
75. தொடக்கத்தில் குஷானர்களின் தலைநகராக இருந்தது எது?
Answer: காபுல்
76. குஷானர்களின் தலைநகரம் காபுலிலிருந்து எந்த நகரத்திற்கு மாற்றப்பட்டது ?
Answer: பெஷாவர் அல்லது புருஷபுரம்
77. குஷானர்களில் மிகவும் புகழ் பெற்ற முதல் அரசியல் மற்றும் ராணுவ தளபதி யார்?
Answer: முதலாம் கட்பிசஸ்
78. இரண்டாம் கட்பிசஸ் நாணயங்களில் யாருடைய உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது?
Answer: சிவபெருமான்
79. இரண்டாம் கட்பிசஸ் வெளியிட்ட நாணயங்களில் அரசர்களுடைய பட்டப்பெயர்கள் என்ன மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன?
Answer: கரோஷ்தி மொழி
80. கனிஷ்கர் எந்தச் சீன தளபதியைத் தோற்கடித்தார்?
Answer: பன்-சியாங்
81. கனிஷ்கர் தீவிரமாகப் பின்பற்றிய மதம் எது?
Answer: பௌத்த மதம்
82. கனிஷ்கர் யாருடைய போதனைகளால் பௌத்தத்தைத் தழுவினார்?
Answer: பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவி அசுவகோசர்
83. கனிஷ்கர் எந்தப் பிரிவு பௌத்தத்தை ஆதரித்தார் ?
Answer: மகாயான பௌத்தம்
84. நான்காவது பௌத்த பேரவையை கனிஷ்கர் எந்த இடத்தில் கூட்டினார்?
Answer: ஸ்ரீநகருக்கு அருகே உள்ள குந்தல வனம்
85. எந்தப் பேரவையின்போது பௌத்தம் மகாயானம் ஹீனயானம் எனப் பிளவுற்றது?
Answer: நான்காவது பௌத்த பேரவை
86. கனிஷ்கரின் அவையிலிருந்த பௌத்தத் துறவிகள் யார் ?
Answer: அஸ்வகோஷர், வசுமித்ரா, நாகார்ஜுனா
87. புத்தசரிதம் என்னும் முதல் சமஸ்கிருத நாடகத்தை எழுதியவர் யார்?
Answer: aஅஸ்வகோஷர்7
88. காஷ்மீரில் கனிஷ்கர் உருவாக்கிய புதிய நகரம் எது?
Answer: கனிஷ்கபுரா
89. குஷாணப் பேரரசர் யாருடைய அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது ?
Answer: அகஸ்டஸ் சீசர்
0 Comments