கடலோர காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்புத் தகுதி; 300 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க...!
இந்திய கடலோர காவல் படையில் Navik பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
|
அதிகாரத்தின் பெயர் |
Tamil Nadu Police CID Recruitment 2025 |
|
பதவியின் பெயர் |
Navik(GD) |
|
மொத்த காலியிடங்கள் |
300 |
|
வயது வரம்பு |
18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும் |
|
கல்வித் தகுதி |
10 ஆம் வகுப்பு தேர்ச்சி. |
|
சம்பளம் |
₹21,700 |
|
விண்ணப்பம் தொடங்கும் தேதி |
11.02.2025 |
|
விண்ணப்பிக்கக் கடைசி தேதி |
25.02.2025 |
|
விண்ணப்பக் கட்டணம் |
₹300 |
|
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் |
|
தேர்வுத் தேதி |
அறிவிக்க வேண்டும் |
|
அதிகாரப்பூர்வ இணையதளம் |
பணியின் விவரங்கள்
- இந்திய கடலோர காவல் படையில் நேவிக் பதவியில் ஜென்ரல் டியூட்டி மற்றும் டொமெஸ்டிக் பிராஞ்ச் என மொத்தம் 300
காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- நேவிக் ஜென்ரல் டியூட்டி கீழ் 260
காலிப்பணியிடங்களும்,
டொமெஸ்டிக் பிராஞ்ச் கீழ் 40
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி
- நேவிக் ஜென்ரல் டியூட்டி பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம்கீழ் 12-ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- நேவிக் டொமெஸ்டிக் பிராஞ்ச் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம்கீழ் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
- இந்திய கடலோர காவல்படையில் நேவிக் பதவிகளுக்கு 4 கட்ட தேர்வு முறை உள்ளது. முதலில் கணினி வழி ஆன்லைன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவை நடத்தப்படும். தொடர்ந்து, இறுதி பட்டியல் வெளியாகிச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதி மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
- இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்னப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 11-ம் தேதி முதல் தொடங்கும்
இந்திய கடலோர காவல் படையில் சேர வேண்டும் எனக் கனவுடன் இருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பம் தொடங்கி பின்னர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பாதுகாப்பு படையில் சேர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

0 Comments