பன்முகத்தினை அறிவோம்

1. இந்தியாவில் பன்முகத் தன்மை மேலோங்கி இருப்பதற்கான காரணம்?
Answer:
மக்கள் இடம்பெயர்ந்து தங்கியதால்

2. மலைகள் பீடபூமிகள் சமவெளிகள் ஆறுகள் கடல்கள் பள்ளத்தாக்கு போன்ற பல்வேறு இயற்கை பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
கண்டம்

3. மலைகள் பீடபூமிகள் சமவெளிகள் ஆறுகள் மற்றும் பல்வேறு இயற்கை பிரிவுகள் முதலியவற்றை பெற்றிருப்பதால் இந்தியா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
துணை கண்டம்

4. இந்தியாவின் அதிக மழை பொழியும் பகுதி எது?
Answer:
மௌசின்ராம், மேகாலயா.

5. இந்தியாவில் மிகக் குறைவான மழை பொழியும் பகுதி எது?
Answer:
ஜெய்சால்மர், ராஜஸ்தான்

6. ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு எது?
Answer:
குடும்பம்

7. குடும்பம் என்பது எத்தனை வகைப்படும்?
Answer:
இரண்டு வகை :கூட்டு குடும்பம் மற்றும் தனிக்குடும்பம்

8. இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா எத்தனை மொழிகளைக் கொண்டுள்ளது?
Answer: 122
முக்கிய மொழிகள் மற்றும் 1599 பிற மொழிகள்

9. இந்தியாவில் காணப்படும் நான்கு முக்கிய மொழிக்குடும்பங்கள் என்னென்ன?
Answer:
இந்தோ- ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோஆஸ்டிக் மற்றும் சீன திபெத்தியன்

10. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பேசப்படும் முதல் ஐந்து மொழிகள் என்னென்ன?
Answer:
இந்தி, வங்காளம், தெலுங்கு, மராத்தி, தமிழ்

11. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஹிந்தி பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
Answer: 43.63%

12. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வங்காளம் பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?

Answer: 8.30%

13. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தெலுங்கு பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
Answer: 6.93%

14. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மராத்தி பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
Answer: 7.09%

15. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தமிழ் பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
Answer: 5.89%

16. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் படி எத்தனை மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள?
Answer: 22
மொழிகள்

17. எந்த ஆண்டு இந்திய அரசால் தமிழ் மொழி முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது ?
Answer: 2004

18. தற்போது எத்தனை மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது?
Answer:
ஆறு மொழிகள்

19. சமஸ்கிருதம் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது ?
Answer: 2005

20. தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டன ?
Answer: 2008

21. மலையாளம் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
Answer: 2013

22. எந்த ஆண்டு ஒரியா செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?

Answer: 2016

23. இந்திய தொல்லியல் துறையில் இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவை?
Answer: 60%

24. சத்ரியா நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
Answer:
அசாம்

25. மணிப்புரி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
Answer:
மணிப்பூர்

26. ஒடிசி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
Answer:
ஒடிசா

27. யக்ஷகானம் எனும் நடனம் எந்த மாநிலத்தில் ஆடப்படுகிறது ?
Answer:
கர்நாடகா

28. குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தில் ஆடப்படுகிறது ?
Answer:
ஆந்திரப் பிரதேசம்

29. கதகளி எந்த மாநிலத்தைச் சேர்ந்த நடனம்?
Answer:
கேரளா

30. தமிழ்நாட்டின் நடனம் எது?
Answer:
பரதநாட்டியம்

31. கரகாட்டம் ஒயிலாட்டம் கும்மி தெருக்கூத்து பொம்மலாட்டம் புலி ஆட்டம் கோலாட்டம் தப்பாட்டம் முதலிய நடனங்கள் எந்த மாநிலத்தைச் சார்ந்தவை ?
Answer:
தமிழ்நாடு

32. தெய்யம், மோகினி ஆட்டம் முதலிய நாட்டுப்புற நடனங்கள் எந்த மாநிலத்தைச் சார்ந்தவை?

Answer:
கேரளா

33. பாங்க்ரா நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
Answer:
பஞ்சாப்

34. கார்பா, தாண்டியா நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
Answer:
குஜராத்

35. கல்பேலியா, கூமர் ஆகிய நடனங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது ?
Answer:
ராஜஸ்தான்

36. ராசலீலா நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது ?
Answer:
உத்தரபிரதேசம்

37. சோலியா நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது ?
Answer:
உத்தரகாண்ட்

38. பிஹு நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
Answer:
அசாம்

39. வேற்றுமையில் ஒற்றுமை எனும் சொற்றொடர் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
Answer:
டிஸ்கவரி ஆப் இந்தியா

40. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார் ?
Answer:
ஜவஹர்லால் நேரு

41. இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால் இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என அழைத்தவர் யார்?
Answer:
வரலாற்றாசிரியர் வி..ஸ்மித்