தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்


1. கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் எது?
Answer:
பூம்புகார்

2. பூம்புகார் எந்தக் கடற்கரையில் அமைந்துள்ளது ?

Answer:
வங்காளவிரிகுடா

3. பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் தற்போதைய எந்த இடத்தின் அருகே உள்ளது?
Answer:
மயிலாடுதுறை

4. பூம்புகார் நகரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ?
Answer:
புகார், காவிரிப்பூம்பட்டினம்

5. எந்த அரசின் துறைமுக நகரமாகப் பூம்புகார் விளங்கியது?
Answer:
சோழ அரசு

6. பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம்குறித்து எந்தச் சங்க இலக்கிய நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்?
Answer:
பட்டினப்பாலை சிலப்பதிகாரம் மணிமேகலை

7. கண்ணகியின் தந்தை யார் ?
Answer:
மாநாய்கன்

8. மாநாய்கன் என்பதன் பொருள்?
Answer:
பெருங்கடல் வணிகம்

9. கோவலனின் தந்தை பெயர் ?
Answer:
மாசாத்துவன்

10. மாசாத்துவன் என்பதன் பொருள் ?
Answer:
பெருவணிகன்

11. கூடுதலான விலைக்குப் பொருளை விற்பது தவறான செயல் என்று வணிகர்கள் கருதியதாக எந்த நூல் கூறுகிறது ?
Answer:
பட்டினப்பாலை

12. பட்டினப்பாலையின் ஆசிரியர் மற்றும் காலம்?
Answer:
கடியலூர் உருத்திரங்கண்ணனார் கிமு இரண்டாம் நூற்றாண்டு

13. கடல் வழியாக எவை இறக்குமதி செய்யப்பட்டன ?
Answer:
குதிரைகள்

14. தரைவழி தடங்கள் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
Answer:
கருமிளகு

15. வடமலையிலிருந்து எது இறக்குமதி செய்யப்பட்டது?
Answer:
தங்கம்

16. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்?
Answer:
சந்தனம்

17. தென் கடல் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
Answer:
முத்து

18. கிழக்குப் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
Answer:
பவளம்

19. ஈழத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
Answer:
உணவுப் பொருள்

20. சங்கம் வளர்த்த நகரம் என்று அழைக்கப்படுவது?
Answer:
மதுரை

21. கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்தவர்கள் எத்தனை பேர்?
Answer: 49
பேர்

22. எந்த நாட்டின் அரசர் முத்துக்களை உவரி என்னும் இடத்திலிருந்து இறக்குமதி செய்தார்?
Answer:
பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன்

23. உவரி எந்தத் துறைமுகத்திற்கு அருகில் உள்ளது?
Answer:
கொற்கை

24. கொற்கை யாருடைய துறைமுகம்?
Answer:
பாண்டியர்

25. எந்த நாட்டின் நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையிலிருந்து உள்ளது?
Answer:
ரோமானியர்

26. எத்தனை வகை அங்காடிகள் மதுரையில் இருந்துள்ளன?
Answer:
நாளங்காடி, அல்லங்காடி

27. இரவு பகல் வேறுபாடு இல்லாமல் மதுரை நகரம் விளங்கியதால் அது எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?
Answer:
தூங்கா நகரம்

28. எந்தப் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய செய்திகள் காணப்படுகிறது?
Answer:
மெகஸ்தனிஸ்

29. சந்திரகுப்தரின் எந்த அமைச்சர் மதுரையை பற்றித் தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்?
Answer:
சாணக்கியர்

30. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற எந்தச் சீன வரலாற்று ஆசிரியர் கூடுதல் படிப்புக்காகக் காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்து இருக்கிறார் ?
Answer:
யுவான் சுவாங்

31. துறைமுக நகரம் என அழைக்கப்படுவது?
Answer:
புகார்

32. வணிக நகரம் என அழைக்கப்படுவது ?
Answer:
மதுரை

33. கல்வி நகரம் என அழைக்கப்படுவது?
Answer:
காஞ்சி

34. நகரங்களில் சிறந்தது காஞ்சியெனக் கூறியவர்?
Answer:
காளிதாசர்

35. கல்வியில் கரையிலாத காஞ்சியெனக் கூறிய நாயன்மார் யார்?
Answer:
திருநாவுக்கரசர்

36. புத்தகயா சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனித தலங்களில் காஞ்சியும் ஒன்று என எந்தச் சீன வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
Answer:
யுவான்சுவாங்

37. தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம்?
Answer:
காஞ்சி

38. தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் போன்றவர்கள் எந்த நகரத்தில் பிறந்து வாழ்ந்தவர்கள்?
Answer:
காஞ்சி

39. கோயில்களின் நகரம் என அழைக்கப்படுவது?
Answer:
காஞ்சி

40. காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?
Answer:
பல்லவ அரசர் ராஜசிம்மன்

41. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் என்னென்ன?
Answer:
கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள்

42. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் என்னென்ன?
Answer:
தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்

43. பாண்டிய நாடு எந்த இடங்களை உள்ளடக்கியிருந்தது?
Answer:
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள்

44. தொண்டைநாடு எவற்றை உள்ளடக்கியிருந்தது?
Answer:
காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு பகுதி

45. பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை எங்குக் கழித்தார்?
Answer:
காஞ்சி

46. ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படுவது ?
Answer:
காஞ்சிபுரம்

47. சோறுடைத்து என அழைக்கப்படும் நாடு?
Answer:
சோழ நாடு

48. முத்துடைத்து என அழைக்கப்படும் நாடு?
Answer:
பாண்டிய நாடு

49. வேழமுடைத்து என அழைக்கப்படும் நாடு
Answer:
சேர நாடு

50. சான்றோருடைத்து என அழைக்கப்படும் நாடு?
Answer:
தொண்டை நாடு