தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
1. கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் எது?
Answer: பூம்புகார்
2. பூம்புகார் எந்தக் கடற்கரையில் அமைந்துள்ளது ?
Answer: வங்காளவிரிகுடா
3. பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் தற்போதைய எந்த
இடத்தின் அருகே உள்ளது?
Answer: மயிலாடுதுறை
4. பூம்புகார் நகரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
?
Answer: புகார், காவிரிப்பூம்பட்டினம்
5. எந்த அரசின் துறைமுக நகரமாகப் பூம்புகார் விளங்கியது?
Answer: சோழ அரசு
6. பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம்குறித்து எந்தச் சங்க இலக்கிய நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்?
Answer: பட்டினப்பாலை
சிலப்பதிகாரம் மணிமேகலை
7. கண்ணகியின் தந்தை யார் ?
Answer: மாநாய்கன்
8. மாநாய்கன் என்பதன் பொருள்?
Answer: பெருங்கடல்
வணிகம்
9. கோவலனின் தந்தை பெயர் ?
Answer: மாசாத்துவன்
10. மாசாத்துவன் என்பதன் பொருள் ?
Answer: பெருவணிகன்
11. கூடுதலான விலைக்குப் பொருளை விற்பது தவறான செயல் என்று
வணிகர்கள் கருதியதாக எந்த நூல் கூறுகிறது ?
Answer: பட்டினப்பாலை
12. பட்டினப்பாலையின் ஆசிரியர் மற்றும் காலம்?
Answer: கடியலூர்
உருத்திரங்கண்ணனார் கிமு இரண்டாம் நூற்றாண்டு
13. கடல் வழியாக எவை இறக்குமதி செய்யப்பட்டன ?
Answer: குதிரைகள்
14. தரைவழி தடங்கள் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருள்
?
Answer: கருமிளகு
15. வடமலையிலிருந்து எது இறக்குமதி செய்யப்பட்டது?
Answer: தங்கம்
16. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
பொருள்?
Answer: சந்தனம்
17. தென் கடல் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
பொருள் ?
Answer: முத்து
18. கிழக்குப் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
பொருள் ?
Answer: பவளம்
19. ஈழத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
Answer: உணவுப்
பொருள்
20. சங்கம் வளர்த்த நகரம் என்று அழைக்கப்படுவது?
Answer: மதுரை
21. கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்தவர்கள் எத்தனை
பேர்?
Answer: 49 பேர்
22. எந்த நாட்டின் அரசர் முத்துக்களை உவரி என்னும் இடத்திலிருந்து இறக்குமதி செய்தார்?
Answer: பண்டைய
இஸ்ரேல் அரசர் சாலமோன்
23. உவரி எந்தத் துறைமுகத்திற்கு அருகில் உள்ளது?
Answer: கொற்கை
24. கொற்கை யாருடைய துறைமுகம்?
Answer: பாண்டியர்
25. எந்த நாட்டின் நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையிலிருந்து
உள்ளது?
Answer: ரோமானியர்
26. எத்தனை வகை அங்காடிகள் மதுரையில் இருந்துள்ளன?
Answer: நாளங்காடி, அல்லங்காடி
27. இரவு பகல் வேறுபாடு இல்லாமல் மதுரை நகரம் விளங்கியதால்
அது எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?
Answer: தூங்கா
நகரம்
28. எந்தப் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் குறிப்புகளில்
மதுரையைப் பற்றிய செய்திகள் காணப்படுகிறது?
Answer: மெகஸ்தனிஸ்
29. சந்திரகுப்தரின் எந்த அமைச்சர் மதுரையை பற்றித் தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்?
Answer: சாணக்கியர்
30. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற எந்தச் சீன வரலாற்று
ஆசிரியர் கூடுதல் படிப்புக்காகக் காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்து இருக்கிறார் ?
Answer: யுவான்
சுவாங்
31. துறைமுக நகரம் என அழைக்கப்படுவது?
Answer: புகார்
32. வணிக நகரம் என அழைக்கப்படுவது ?
Answer: மதுரை
33. கல்வி நகரம் என அழைக்கப்படுவது?
Answer: காஞ்சி
34. நகரங்களில் சிறந்தது காஞ்சியெனக் கூறியவர்?
Answer: காளிதாசர்
35. கல்வியில் கரையிலாத காஞ்சியெனக் கூறிய நாயன்மார் யார்?
Answer: திருநாவுக்கரசர்
36. புத்தகயா சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனித தலங்களில்
காஞ்சியும் ஒன்று என எந்தச் சீன வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
Answer: யுவான்சுவாங்
37. தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம்?
Answer: காஞ்சி
38. தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் போன்றவர்கள் எந்த நகரத்தில்
பிறந்து வாழ்ந்தவர்கள்?
Answer: காஞ்சி
39. கோயில்களின் நகரம் என அழைக்கப்படுவது?
Answer: காஞ்சி
40. காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?
Answer: பல்லவ அரசர்
ராஜசிம்மன்
41. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் என்னென்ன?
Answer: கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி
மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள்
42. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் என்னென்ன?
Answer: தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை
மாவட்டங்கள்
43. பாண்டிய நாடு எந்த இடங்களை உள்ளடக்கியிருந்தது?
Answer: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி
உள்ளிட்ட தென் மாவட்டங்கள்
44. தொண்டைநாடு எவற்றை உள்ளடக்கியிருந்தது?
Answer: காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர்
மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு பகுதி
45. பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை எங்குக் கழித்தார்?
Answer: காஞ்சி
46. ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படுவது ?
Answer: காஞ்சிபுரம்
47. சோறுடைத்து என அழைக்கப்படும் நாடு?
Answer: சோழ நாடு
48. முத்துடைத்து என அழைக்கப்படும் நாடு?
Answer: பாண்டிய
நாடு
49. வேழமுடைத்து என அழைக்கப்படும் நாடு
Answer: சேர நாடு
50. சான்றோருடைத்து என அழைக்கப்படும் நாடு?
Answer: தொண்டை
நாடு
0 Comments
Post a Comment