காற்று
1. பூமியானது காற்றால் ஆன ஒரு மிகப்பெரிய மேல் உறையால் மூடப்பட்டுள்ளது இது எவ்வாறு அழைக்கப்படும்?
Answer: வளிமண்டலம்
2. வளி மண்டலமானது புவிப் பரப்பிலிருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் பரந்து விரிந்துள்ளது?
Answer: 800 கிலோ மீட்டர்
3. சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கக்கூடிய பெரும்பாலான கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எது?
Answer: வளி மண்டலம்
4. வளிமண்டலம் புவிக்கு அருகில் மிக அதிகமாகவும் மேலே செல்லச் செல்லக் குறைவாகவும் காணப்படுவதற்கு காரணம் என்ன?
Answer: புவியீர்ப்பு விசை
5. வளி மண்டலமானது எத்தனை அடுக்குகளால் ஆனது ?
Answer: ஐந்து
6. வளிமண்டலத்தின் அடுக்குகள் என்னென்ன?
Answer: அடி வளிமண்டலம் (troposphere), அடுக்கு வளிமண்டலம் (stratosphere), இடைவெளி மண்டலம் (mes, அயனிre), அயனி மண்டலம்(ionosphere), புற வளிமண்டலம் (exosphere)
7. பூமிக்கு அருகில் உள்ள நாம் வாழும் அதற்கு என்ன பெயர்?
Answer: அடிவளி மண்டலம்
8. அடி வளிமண்டலம் புவி மேற்பரப்பிலிருந்து எத்தனை கிலோமீட்டர் உயரம் வரையிலானது?
Answer: 16 கிலோமீட்டர்
9. காற்றின் இயக்கம் எந்த அடுக்கில் நடைபெறும் ?
Answer: அடிவளி அடுக்கு
10. எந்த அடுக்கில் உள்ள நீராவி தான் மேகங்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது ?
Answer: அடிவளி அடுக்கு
11. பூமியில் நாம் அனுபவிக்கும் நிலைக்கு எந்த அடுக்கு காரணமாகிறது?
Answer: அடிவளி அடுக்கு
12. வலுவான காற்று மற்றும் மாறுபாடான வானிலேயை தவிர்ப்பதற்காக எந்த அடுக்குக்கு மேல் வானூர்திகள் பறக்கின்றன?
Answer: அடிவளி அடுக்கு
13. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காற்றுதிசையைக் கண்டறிய வீசத் திசையை கண்டறியஎது பயன்படுகிறது?
Answer: காற்று திசைகாட்டி
14. அடி வளிமண்டலத்திற்கு மேலே அமைந்துள்ள மண்டலம் எது ?
Answer: அடுக்கு வளிமண்டலம்
15. எந்த அடுக்கில் ஓசோன் படலம் அமைந்துள்ளது?
Answer: அடுக்கு வளிமண்டலம்
16. சூரியனிலிருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் படலம் எது?
Answer: ஓசோன் படலம்
17. "காற்று என்பது ஒரு அடிப்படை பொருள் அல்ல ஆனால் அது பல வாயுக்கள் அடங்கிய ஒரு கலவை "எனக் கூறியவர் யார் ?
Answer: ஜோசப் பிரிஸ்ட்லி(1774)
18. ஆக்சிஜனைக் கண்டறிந்தவர் யார்?
Answer: ஜோசப் பிரிஸ்ட்லி
19. நிறமற்ற அதிக வினைத்திறன் கொண்எனப் பெயரிட்டவர் வாயுவிகு ஆக்சிஜன் என டவர் யார்?
Answer: அண்டனி லவாய்சியர்
20. அண்டனி லவாய்சியர் எந்த நாட்டு வேதியியலாளர்?
Answer: பிரெஞ்சு
21. எரிதல் நிகழும்போது பெரும்பாலான ஆக்சிஜன் என்னவாக மாற்றப்படுகிறது?
Answer: கார்பன்-டை-ஆக்சைடு
22. 1730 முதல் 1799 வரை தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நிகழ்த்துவதற்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது என்பதை நிரூபித்தவர் யார்?
Answer: இன்ஜென்ஹவுஸ்
23. எரிவதால் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்பட்டு மாசடையும் காற்றினை தாவரங்கள் ஒளிச்சேர்க்கை புரிந்து ஆக்சிஜனை வெளியிட்டுத் தூய்மைப்படுத்துகிறது எனக் நிருபித்தவர் யார்?
Answer: இன்ஜென்ஹவுஸ்
24. நைட்ரஜனை கண்டறிந்தவர் யார்?
Answer: டேனியல் ரூதர்போர்டு
25. டேனியல் ரூதர்போர்டு எந்த நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர்?
Answer: ஸ்காட்லாந்து
26. கார்பன் டையாக்சைடு எந்த நீரில் பால் போல மாறும்?
Answer: சுண்ணாம்பு நீர்
27. காற்றில் எத்தனை பங்கு நைட்ரஜன் வாயு உள்ளது?
Answer: ஐந்தில் நான்கு பங்கு
28. காற்றில் இரண்டாவதாக உள்ள பெரும் பங்கு வாயு எது?
Answer: ஆக்சிஜன்
29. காற்றில் ஆக்சிஜன் எத்தனை பங்கு உள்ளது தோராயமாக ?
Answer: ஐந்தில் ஒரு பங்கு
30. காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?
Answer: 78%
31. காற்றில் ஆக்சிஜன் எத்தனை சதவீதம் உள்ளது?
Answer: 21%
32. காற்றில் கார்பன் டை ஆக்சைடு ஆர்கான் நீராவி மற்றும் பிற வாயுக்கள் எத்தனை சதவீதம் உள்ளன?
Answer: 1 சதவீதம்
33. தொழிற்சாலை அதிகம் உள்ள நகரங்களில் உலவும் காற்றில் மற்ற இடங்களில் உள்ளதைவிட அதிக அளவு எந்த வாயு இருக்கும் ?
Answer: கார்பன் டை ஆக்சைடு
34. கடலோர பகுதிகளில் உள்ள காற்றில் மற்ற இடங்களைவிட அதிகளவு எது அடங்கியிருக்கும் ?
Answer: நீராவி
35. காற்றோட்டம் உள்ள இடங்களில் உள்ள காற்றில் அதிக அளவு எது காணப்படும்?
Answer: தூசு பொருள்கள்
36. வீச்சின் சமன்பாடு என்ன?
Answer: அதிகபட்ச அளவு - குறைந்தபட்ச அளவு
37. ஆக்சிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது ஒளியையும் வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்விற்கு என்ன பெயர்?
Answer: எரிதல்
38. ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
Answer: உள்ளெரிதல்
39. தாவரங்கள் வளிமண்டல காற்றுடன் நிகழ்த்தும் வாயுப் பரிமாற்றம் அவற்இலைகளில் உள்ளலுள்ள க்ஷ எந்த மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது?
Answer: ஸ்டொமட்டா
40. தாவரங்கள் அவற்றிற்கான உணவினை எதன் மூலம் உற்பத்தி செய்கின்றன?
Answer: ஒளிச்சேர்க்கை
41. ஒளிச்சேர்க்கையின்போது சூரிய ஒளியை உறிஞ்சப் பயன்படும் பெரும்பாலான தாவரங்களில் காணப்படும் நிறமி எது?
Answer: பச்சையம்
42. நாம் சுவாசிக்கும்பொழுது அதில் உள்ள ஆக்சிஜன் செரிக்கப்பட்ட உணவு பொருட்களுடன் வேதிவினை புரிந்து எவற்றை உருவாக்குகிறது?
Answer: கார்பன் டை ஆக்சைடு, நீராவி மற்றும் ஆற்றல்
43. உணவுப் பொருளுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு நீராவி மற்றும் ஆற்றல் உருவாகும் நிகழ்விற்கு என்ன பெயர் ?
Answer: சுவாசம்
44. நாம் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் காற்றில் எந்த வாயுவைத் தவிர மற்ற வாயுக்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படும்?
Answer: நைட்ரஜன்
45. நாம் காற்றை உள்ளிழுக்கும்பொழுது 78% ஆக உள்ள நைட்வெளியேற்றும்பொழுதுபொழுது எவ்வளவாக இருக்கும்?
Answer: 78%
46. நாம் காற்றை உள்ளிழுக்கும்பொழுது பொழுது21% ஆகள்ள ஆக்ஸிவெளியேற்றும்பொழுது வெளியேற்றும் பொழுதுஎவ்வளவா ருக்கும்உள்ளிழுக்கும்பொழுது
Answer: 16
47. நாம் காற்றை உள்ளிழுவெளியேற்றும்பொழுது பழு0.03% ஆக உள்ள கா டையாக்சைடு வெளியேற்றம் பொழுது வளவாக இருஉள்ளிழுக்கும்பொழுது?
Answer: 4%வெளியேற்றும்பொழுது
48. நாக்காற்றை உளழுக்கும் பொ ஆக உள்ள மநத வாயுக்கள் வெளியேற்றும்பொழுது க இருக்கும்?
Answer: 0.95%
49. கார்பன் டையாக்சைடு எந்த வெப்பநிலையில் குளிருவிக்கும்பொழுது அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாகத் திட நிலைக்கு மாறுகின்றது?
Answer: -57°C
50. கார்பன் டை ஆக்சைடு திரவ நிலையை அடையாமல் நேரடியாகத் திட நிலைக்கு மாறியப்பின் எவ்வாறு அழைக்கப்படும் ?
Answer: உலர் பனிக்கட்டி
0 Comments
Post a Comment